தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலத்தின் கீழ் இருக்கும் சிவகங்கை கிளையில் ஜெயராமு என்பவர் டிரைவராகவும், மயில் பாண்டியன் என்பவர் கண்டக்டராகவும் வேலை பார்த்து வந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று இருவரும் இளையான்குடியில் இருந்து மானாமதுரை வழியாக சிவகங்கைக்கு பேருந்தை இயக்கி சென்றனர். இந்நிலையில் மானாமதுரை பேருந்து நிலையத்திற்கு 10 மணிக்கு பேருந்து சென்றடைந்தது. இதனையடுத்து இரண்டு பேரும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது பயணி ஒருவர் பேருந்தை எப்போது எடுப்பீர்கள் என கேட்டதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ஜெயராமுவும் மயில் பாண்டியனும் இணைந்து அந்த பயணியை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல பொது மேலாளர் சிங்காரவேலு விசாரணை நடத்தியதில் பயணியை தாக்கியது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் பெருந்த இயக்காமல் ஜெயராமுவும், கண்டக்டர் மயில் பாண்டியனும் தாமதப்படுத்தியது தெரியவந்தது. இதனால் ஜெயராமு, மயில் பாண்டியன் ஆகிய இருவரையும் உயர் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.