கேரளாவில் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளமானது ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை அறிவித்த நிதியமைச்சர் பத்து வருடத்திற்கு மேல் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வால் இந்த துறையை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.