சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்சித்தூர் பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பதற்கு சொந்தமான 18 ஆடுகள் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் தோட்டத்திற்குள் நுழைந்த வெறிநாய்கள் 8 ஆடுகளை கடித்து கொன்றது.

ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த நல்லம்மாளின் குடும்பத்தினர் 8 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் சில ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை துறையினர் உயிரிழந்த 8 ஆடுகளின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் காயமடைந்த ஆடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.