தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவருடைய மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். கடந்த 2013-ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தின் மூலம் கௌதம் கார்த்திக் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து 16 படங்களில் நடித்துள்ள கௌதம் கார்த்திக் நடிப்பில் அண்மையில் பத்து தல என்ற படம் வெளியானது. நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது கிரிமினல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் திருமணத்திற்கு பிறகு கொடுத்த ஒரு பேட்டியில் தான் பட்ட கஷ்டம் குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் யாரிடமும் பணம் வாங்க கூடாது என்று நினைத்தேன். இதனால் என் திருமணத்தைக் கூட என்னுடைய சொந்த காசில் தான் நடத்தினேன். கொரோனா காலத்தின் போது என்னுடைய பைக் மற்றும் கார் என அனைத்தையும் விற்று விட்டேன். அந்த சமயத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் மஞ்சிமா மோகன் தான். நான் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அவரிடம் கலந்தாலோசனை செய்து தான் எடுப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் கொரோனா காலத்தில் பைக் மற்றும் கார் என அனைத்தையும் பெற்றதாக சொன்ன தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.