தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்ஜிஆர்ரை அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என உலக தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் குடி கொண்ட தமிழகத்தின் முடி சூடா மன்னனாக மூன்று முறை செங்கோலோச்சிய தலைவர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களை வீசிக தலைவர் திருமாவளவன் அவர்களும் அவரது கட்சி பொறுப்பாளர்களும் கொச்சைப்படுத்தி பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என உலகத் தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் குடிகொண்ட, தமிழகத்தின் முடிசூடா மன்னனாக மூன்று முறை முதல்வராக செங்கோலோச்சிய தலைவர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களை, விசிக தலைவர் திரு. திருமாவளவன் அவர்களும், அவரது கட்சிப் பொறுப்பாளர்களும் கொச்சைப்படுத்தி… pic.twitter.com/It6ELv9OfJ
— Nainar Nagenthiran (@NainarBJP) August 9, 2025
