உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 4.7 மில்லியன் whatsapp கணக்குகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பயனர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக பயனர் பாதுகாப்பு அறிக்கையில் whatsapp தெரிவித்துள்ளது.