இந்தியாவில் தனியார் எஃப் எம் வானொலி நிலைய நிகழ்ச்சிகளுக்கான விளம்பர கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த டிசம்பர் 2015 ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் மாதம் வரையில் அதிகரித்து வரும் செலவுகள் அடிப்படையில் 10 வினாடிகளுக்கு 52 ரூபாய் இருந்து 74 ரூபாயாக கட்டணம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் எஃப் எம் வானொலி நிலையங்களும் இந்த புதிய அறிவிப்பால் பயனடைந்துள்ளன. மேலும் அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 106 fm வானொலி நிலையங்களுக்காக கட்டணம் நூறு சதவீதம் அதிகரிக்கும் என்றும் 81 எப்எம் வானொலி நிலையங்களுக்கான கட்டணம் 50 முதல் 100% அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.