பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என மொத்தம் 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. படப்பை குணா சிறைக்குள் இருக்கும்போதே, உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியை ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட வைத்து, திமுக, அதிமுக என மாபெரும் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தியவர்