தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது  அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்பவர்களுக்கு அரசு புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன்படி வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை உயர்கல்விக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய NSS மாணவர்கள் பள்ளிகளுக்கே வந்து உதவுவார்கள். மேலும் உயர் கல்விக்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்து சொல்வார்கள். இடைநிற்றலை தடுப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.