பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும் கொண்டாடும் விதமாக ஜூலை 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஆடி திருவாதிரைவிழா நடைபெற்றது.

இன்று பிரதமர் மோடி சோழவந்தம் ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக ஹெலிபேட்டில் வந்து இறங்கினார். வழிநடுக சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருக்கும் மக்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்துள்ளார்.