கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் விளையாட்டு திடல் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் கடைவீதிக்கு சென்றுள்ளார். அவர் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிவ வந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதேபோல கந்தம் பாளையத்தில் வீடு கட்டுவதற்காக தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தொட்டிக்குள் 5 அடி நீளமுடைய நாகப்பாம்பு இருந்தது. அதனையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு காட்டு பகுதியில் விட்டனர்.