ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அனுமார் கோவில் அருகே ரவிச்சந்திரன் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மர குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்சத்திற்கும் மேலான மர பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.