நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்சட்டி பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்தின் சேத மதிப்பு மூன்று லட்சத்திற்கும் மேலிருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.