தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்ட ஊர்மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விவசாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யா, அய்யாதுரை, தினேஷ் மற்றும் சிவசக்தி ஆகியோர் விவசாயியை கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் இந்த கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை . மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.