திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆராகுர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாட்டு சாணம், எருவு ஆகிய இயற்கை உரத்தை டிராக்டரில் ஏற்றி வந்து விவசாய நிலத்தில் கொட்டியுள்ளார். பின்னர் டிராக்டரில் ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏழுமலையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.