செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அமைதியான புதுப்பட்டு கிராமத்தில் நள்ளிரவில் 30 ஏக்கர் தாங்கல் ஏரியின் மதகு அருகே கரை உடைந்து வீணாக தண்ணீர் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டது. இந்த எதிர்பாராத நிகழ்வால் 100 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீரின்றி பயிர்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே  விவசாயிகளின் வாழ்வாதாரம் பதிக்கப்பாடமல் தவிர்க்க ஏரியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.