தமிழில் மணிரத்னம் டைரக்டு செய்த “பம்பாய்” திரைப்படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இதையடுத்து கமலுடன் இந்தியன், அர்ஜுன் ஜோடியாக முதல்வன் ரஜினிகாந்துடன் பாபா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இந்தியில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார் மனிஷா. கடந்த 2010-ல் நேபாள தொழிலதிபரை திருமணம் செய்து 2 ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தார்.

இதனிடையே மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அமெரிக்கா சென்று ஒரு ஆண்டு சிகிச்சை பெற்றார். இப்போது புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்து மீண்டுமாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மனிஷா கொய்ராலா இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் “இனிமையான மனிதர் மணிரத்னம். அவர் திரைப்படத்தில் நடித்தது நிறைவாக இருந்தது. மணிரத்னம் படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. அவர் ஒரு பொக்கிஷம் ஆவார். மணிரத்னத்தின் ஒவ்வொரு திரைப்படமும் தலைசிறந்த படைப்புகள்” என மனிஷா கூறியுள்ளார்.