தமிழில் கார்த்தி நாயகியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தளபதியுடன் வாரிசு படத்திலும் நடித்து அசத்தினார். மேலும் பல்வேறு மொழிகளில் வெளியாகிய புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்நிலையில் ராஷ்மிகாவும் தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா சீனிவாசும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் தெலுங்கு பட உலகில் பேச்சு கிளம்பி இருக்கிறது. பொது நிகழ்ச்சிகள், பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொள்ளும் புகைப்படங்களும் வெளிவந்தது. இந்நிலையில் பெல்லம் கொண்டா சீனிவாஸ் கூறியதாவது “நானும் ராஷ்மிகாவும் காதலிக்கிறோம் எனும் தகவல் எப்படி வெளியானது என்றே தெரியவில்லை.

எனினும் நாங்கள் காதலிக்கவில்லை, நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம். நாங்கள் இரண்டு பேரும் அடிக்கடி ஐதராபாத்திலிருந்து மும்பைக்கு சென்று வருவதால் விமான நிலையத்தில் சந்தித்துக்கொள்கிறோம். இதை வைத்து வதந்தி பரவி வருகிறது என்று அவர் கூறினார்.