இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் சிங்கம் போல உடை அணிந்து உண்மையான சிங்கங்களுடன் நடமாடுகிறார். அவரைக் அந்த சிங்கங்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது இந்த புதிய உறவினர் யார் என்பதை கண்டுபிடிக்க விரும்பியது போல் அந்த சிங்கங்கள் அவரை சுற்றி சுற்றி வந்தது. இதைத் தொடர்ந்து ஒரு சிங்கம் அவரை தொட்டது. இதனால் ஆபத்து வருமென்று நினைத்து உடனடியாக பயத்தில் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார் .

இதிலிருந்து சிங்கமாகவே வேடமிட்டு வந்தாலும் நேரில் ஒரு உண்மையான சிங்கத்தை எதிர்கொள்வது வேறு விஷயம் என்பது தெரிய வருகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதோடு அந்த வீடியோவில் இன்னொரு வேடிக்கையான காட்சியும் இடம் பெற்றிருந்தது. அந்த காட்சியில் 2 பேர் வரிக்குதிரை உடையில் காட்டிற்கு வந்தனர். அப்போது அவரை கண்ட 2 சிங்கங்கள் உணவாக நினைத்து வேட்டையாடத் தொடங்கியது. அதில் வேடமிடப்பட்ட வரிக்குதிரையின் தலைப்பகுதியை உணவென நினைத்து எடுத்துக்கொண்டு காட்டிற்குள் ஓடியது. இதுபோன்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி இணையதள வாசிகளுக்கு யதார்த்தம் சில நேரங்களில் கற்பனையை தாண்டி அதிக வித்தியாசமாக இருக்க முடியும் என்பதை காட்டுகிறது.