அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பா.ஜ.க கூறியுள்ளது. அதோடு தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்,.27 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இபிஎஸ்க்கு ஆதரவு தரவேண்டும் என்றும் தமிழக பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி முன் மொழிந்த வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக உள்ளதாக பாஜக சனிக்கிழமை கூறியுள்ளது. அதேபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியும் பாஜகவின் முடிவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது