ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகி வருகிறது. இதில் திமுக கூட்டணியானது முன்னிலை வகித்து வருகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முதல் சுற்று முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல் சுற்றில் காங்கிரஸ்-8429, அதிமுக-2873, நாம் தமிழர் கட்சி-522, தேமுதிக-112 வாக்குகள் பெற்றுள்ளன. 2ஆம் சற்றுக்கான வாக்கு பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகி விடும் என்பதால், 3-வது சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது.