மதுரை முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் மகளின் திருமண நிகழ்ச்சி நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். இதையடுத்து மதுரை கோச்சடையிலுள்ள தனியார் விடுதியில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் திமுகவிற்கு வாக்காளர்கள் வெற்றியளிக்கவில்லை.

திமுக வெற்றியை வாங்கியுள்ளது. EPS-ன் ஆணவம், உடன் இருப்பவர்களின் மோசமான வழிகாட்டுதல்கள் தான் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலின் தோல்விக்கு காரணம். இரட்டை இலை இல்லை எனில் தோல்வியின் நிலை இதைவிட மிகவும் மோசமாகி இருக்கும் என அவர் பேசியுள்ளார்.