உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு(30) என்ற பெண் சுமார் 18 மாதங்களாக தொடர்ந்து இரவு நேரத்தில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியதால் கண் பார்வையை இழந்ததாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பார்வையில் குறைபாடு உள்ளதாக மருத்துவரிடம் சென்றபோது அப்பெண்ணுக்கு Smartphone vision syndrome இருப்பது உறுதியானது. உரிய நேரத்தில் இது கண்டறியப்பட்டதால் அந்த பெண்ணின் பார்வையை மருத்துவர்கள் மீட்டனர். ஆகவே இரவில் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.