மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.

தற்போது வரை பனிரெண்டாவது தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை பணம் வங்கி கணக்கில் வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொகை உயர்த்தப்பட்ட உள்ளதாக பல செய்திகள் வலம் வந்தது.  இதற்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதாவது PM கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.