மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம்(டிஆர்) உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது.

அவ்வாறு அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியும் உயரும். அதோடு பே மேட்ரிக்ஸ் அளவை பொறுத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வானது மாறுபடும்.