சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு நபர் சோபாவில் அமர்ந்து செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் செய்தித் தாள் படிப்பதை பர்க்கும் குரங்குக்கு தானும் அப்படி செய்யவேண்டும் என ஆர்வம் ஏற்படுகிறது. மனிதர்கள் செய்யக்கூடிய பல செயல்களை குரங்குகளால் செய்ய முடியும். அதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. அதாவது அந்த குரங்கு தன் உரிமையாளருடன் சேர்ந்து செய்தித்தாள் படிக்கிறது. இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.