சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று கணபதி வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கே.ஆர் தோப்பூர் பவர் ஹவுஸ் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கணபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.