இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ரூ.28 லட்சம் செலவில் 4,000 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நாகரீக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு வீடு கட்டுவது, பிரதமர் மோடியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கக்கூடிய தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில் இது ஒரு மைல்கல் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.