தமிழக அரசியலில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். அதற்கு தகுந்தாற் போன்று பல சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பின் அது சரியானது. இந்நிலையில் பாஜகவின் ஐடி விங் தலைவர் அதிமுகவில் இணைந்ததை அமர் பிரசாத் ரெட்டி கடுமையான முறையில் விமர்சித்துள்ள நிலையில், தற்போது கோவில்பட்டியில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அதாவது எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை பாஜக இளைஞரணி சார்பில் அதன் மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் எரித்துள்ளனர். இது போக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையே கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.