ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் உண்டான பயங்கர நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டின் கோய் நகரத்தில் நேற்று இரவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 5.9 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏழு நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 440 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.