பறவைகளின் ராஜாவான கழுகுக்கும், பாம்புக்கும் இடையேயான பகை பழமையானது. இரண்டும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உயிருக்குப் போராடும் சண்டை தொடங்கிவிடும். இதை உறுதிப்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதில், கழுகு ஆரம்பத்தில் பாம்பை தனது கூரிய கால்களால் பிடித்து ஆதிக்கம் செலுத்தினாலும், பின்னர் நிலைமை தலைகீழாக மாறி, கழுகே உயிரை இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டது.

வீடியோவில், கழுகு பாம்பின் தலையை தனது கால்களால் இறுகப் பற்றி, அதன் உயிரை முடிக்க முயல்கிறது. பாம்புக்கு தப்பிக்க வழியே இல்லை எனத் தோன்றிய நிலையில், திடீரென நிலைமை மாறுகிறது.

பாம்பு தனது முழு வலிமையுடன் கழுகைச் சுற்றி இறுக்கமாகப் பிணைத்து, கழுத்தை இலக்காகக் கொண்டு தாக்குகிறது. கழுகு எவ்வளவு முயன்றும், பாம்பின் இறுக்கமான பிடியில் இருந்து திமிற முடியாமல் தவிக்கிறது. இறுதியாக, கழுகு உயிரிழக்கும் வரை பாம்பு அதனை விடவே இல்லை.

இந்த 34 வினாடிகள் நீளமுள்ள வீடியோ, X தளத்தில் @ChauhanDevyani7 ஐடியில் பகிரப்பட்டு, 2 லட்சத்திற்கும் மேல் பார்வைகளையும், நூற்றுக்கணக்கான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

ஒரு பயனர், “இயற்கையின் விளையாட்டு வியப்பானது, சில நேரங்களில் வேட்டையாடி வேட்டையாகிறது” என்று கூற, மற்றொருவர், “கழுகு பாம்பை இலேசாக எடுத்துக்கொண்டது அதன் மிகப்பெரிய தவறு” என்று கருத்து தெரிவித்தார். இன்னொருவர், “பாம்பின் தைரியத்தை பாராட்ட வேண்டும், உயிருக்காக கடைசி வரை போராடியது” என்று பதிவிட்டார்.