நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு மிகப்பெரிய எதிரியான ஊழலை ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கையால் வரி வசூல் அதிகரிக்கிறது. பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் மத்திய அரசு செயல்படுகிறது. பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு முன்பு இல்லாத அளவில் சிறப்பாக செயல்படுகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அமைதியை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை பெற்றுள்ளனர் என்று கூறினார்.