கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் போலீசார் கூட்டு ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பேருந்து டிரைவரான அனுமந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சின்னமணி மதுபோதையில் பேருந்தை இயக்கியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சின்ன மணியை கைது செய்தனர். மேலும் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.