கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திர ராஜன்(25) என்ற மகன் உள்ளார். இவரது மனைவிக்கு ஸ்ரீரங்கத்தில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சந்திரராஜனின் உறவினர்கள் ஒரு வேனில் ஸ்ரீரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம்-வேப்பூர் இடையே சென்ற போது வேனின் பின்பக்க வலது புற டயர் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரின் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் டிரைவர் சுரேஷ், வேனில் வந்த கலியன், சிவகுமார் உள்பட 29 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 29 பேரையும் மீ அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.