உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் கங்கை நீரை பரிசோதனை செய்வது வழக்கம். இந்த நீர் என்பது ஹரித்துவாரை சுற்றியுள்ள 8 இடத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி நதியில் உள்ள நீர் ஏ(A) முதல் ஈ(L) வரை 5 வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஏ என்பது மிகக் குறைந்த நச்சுத்தன்மையைக் கொண்டதாக்கும். அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்த முடியும். அதே போன்று ஈ என்றால் அதிக நச்சுத்தன்மையைக் கொண்டதாகும்.

அந்த தண்ணீரை நாம் குடிக்க பயன்படுத்த முடியாது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கங்கை நதியில் உள்ள நீரில் சோதனை செய்யப்பட்டது. அந்த நீர் ‘பி” வகையைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த நீரை குளிப்பதற்கு பயன்படுத்தலாம் என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.