பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் வேனிட்டி மொபைல் எண்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. இந்த மின் ஏலம் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மின் ஏலத்தில் தங்களுடைய மொபைல் எண்களை ஃபேன்சி எண்களாக பெற விரும்பும் நபர்கள் கலந்து கொள்ளலாம். இந்த கவர்ச்சிகரமான பேன்சி நம்பர்களை பெறுவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான eauction.bsnl.co.in என்ற முகவரிக்குள் சென்று லாகின் ரிஜிஸ்டர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை பதிவு செய்து தேவையான விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு திரையில் காட்டும் பிரீமியம் எண்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து continue to card என்பதை கிளிக் செய்து பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகு நீங்கள் விரும்பிய எண்ணை ஏலத்தில் எடுக்க குறைந்தபட்ச ஏலத் தொவையை பதிவிட வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பயனாளர்கள் H1, H2, H3 என வகைப்படுத்தப்படுவார்கள். இதில் அதிக ஏலம் எடுப்பவருக்கு எண் ஒதுக்கப்படும். ஒருவேளை அவர் நிராகரித்தால் அடுத்தவருக்கு அந்த எண் ஒதுக்கப்படும். மேலும் இந்த ஏலத்தில் நம்பரை வென்றவருக்கு அடுத்த சில நாட்களில் அந்த நம்பர் வழங்கப்படும்.