தமிழ்நாட்டில் நேற்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 1925-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இயக்கம். இன்னும் 2 வருடங்களில் 100-வது ஆண்டு நிறுவன நாளை கொண்டாடவிருக்கும் இயக்கம். இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை செய்து வரும் இயக்கம்.

பேரிடர் நேரத்தில் களத்தில் நின்று மக்கள் சேவை ஆற்றும் இயக்கம். யாரும் செல்ல தயங்கும் பகுதிகளுக்கு சென்று அம்மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து தேசிய சிந்தனையை விதைத்த இயக்கம், சமத்துவத்தை முன்னிறுத்தி நம்முடைய தேச நலன் காக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரம்மாண்ட பேரணி, அனைத்து தடைகளையும் ஆளும் திமுக அரசின் அச்சுறுத்தல்களையும் மீறி தமிழகத்தில் 45 இடங்களில் நடைபெற்று வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.