தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அவர் 1 லட்சத்து 34,000 கோடி ரூபாயை திமுகவினர் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அவர் கூறியதாவது, தொடர்ச்சியாக அண்ணாமலை செய்து வரும் விஷயங்கள் நம் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் சொன்னபடி திமுகவினர் ஏதேனும் தவறு செய்துள்ளதாகவே வைத்துக் கொள்வோம். அனைத்து துறைகளும் மத்திய அரசின் கையில் தானே இருக்கிறது. அவர்களிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்ல வேண்டியதுதானே. திமுகவினரை பொருத்தவரை எங்களுடைய மடியில் கனமில்லை. எனவே வழியில் பயமில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.