அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நான்கு முனை சந்திப்பில் வெயில் காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு வழங்குவதற்காக இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அதோடு அதிமுகவின் புதிய கொடிக்கம்பத்தையும் திறந்து வைத்தார். அதன் பிறகு சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவரிடம் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு சிவி சண்முகம், திமுக கட்சியில் முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுவது இது ஒன்னும் புதிது கிடையாது. இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். அரசாங்கத்தின் சொத்தை அபகரித்து சேர்ப்பது தான் அவர்களுடைய கொள்கை. மேலும் திமுக என்றாலே கொள்ளையடிப்பது மட்டும்தான் என்று கூறினார்.