தமிழக அரசியல் வட்டாரத்தில் சமீப காலமாகவே ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதும் மற்றொரு கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு மாறுவதுமான செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கூட்டணி கட்சிகளான பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவது அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் விலகி பாஜகவில் இணைவது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி மைத்ரேயன், தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்னும் சில முக்கிய புள்ளிகளை தூக்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அதிமுக கட்சியால் புறக்கணிக்கப்பட்டு திமுகவிலும் முக்கியத்துவம் கிடைக்காமல் புலம்பி கொண்டிருக்கும் முக்கிய புள்ளிகளை தூக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். இவர்களை தற்போது கட்சியில் இணைப்பதற்கான வேலையை பாஜக தொடங்கி விட்டதாகவும், தேசிய தலைவர்கள் முன்னிலையில் அதிமுக மற்றும் திமுகவில் இருந்து விலகி வந்தவர்களை பாஜகவில் இணைக்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.