தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா. இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் சேர்ந்து நடித்ததன் மூலம் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளலாம்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா ஆகியோர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த திருமண புகைப்படங்களை தற்போது நீக்கியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகர் விஷ்ணுகாந்திடம் கேட்டபோது கூடிய விரைவில் அனைத்து தகவல்களும் தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் ஆன ஒரே மாதத்தில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா ஜோடி விவாகரத்து செய்வதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.