ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு டெபாசிட் வாங்குமா? என்று பார்க்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சவால் விடுத்துள்ளார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று (பிப்,.9) புகார் மனு அளித்தபின் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரை சந்தித்து பேசியதாவது, டெபாசிட் கூட வாங்க முடியாவிட்டால் கட்சியை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து விட்டு அவரது காலில் விழுந்து வழங்க வேண்டும் இபிஎஸ்.

ஈரோடு கிழக்குத் தொகுதி குறித்து சிறு வயதிலிருந்தே தனக்குத் தெரியும் என்று கூறிய புகழேந்தி, இரட்டை இலைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை வந்துவிடுமோ என்று அஞ்சுவதாக கவலைப்பட்டார். மேலும் பாஜக மீது மரியாதை வைத்திருக்கிறோம். அதற்காக அண்ணாமலை சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது என்றார்.