IPL கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியானது பேட்டிங் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் ஆடிய சென்னை 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் அடித்தது.

அதாவது, ஷிவம் துபே 25 ரன்கள், ருதுராஜ் 24 ரன்கள், அம்பதி ராயுடு 23 ரன்கள், ரகானே 21 ரன்கள், ஜடேஜா 21 ரன்கள் அடித்து குவித்தனர். இதையடுத்து 8வது வீரராக களமிறங்கிய கேப்டன் டோனி, 9 பந்துகளில் 20 ரன்கள் அடித்து கெத்து காட்டினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் சார்பாக மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினர்.

அதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி அணியானது களம் இறங்கியது. அந்த அணியின் ரூசோவ் 35 ரன், மனீஷ் பாண்டே 27 ரன், அக்சர் படேல் 21 ரன் எடுத்து குவித்தனர். கடைசியில் டெல்லி அணியானது 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டும்தான் எடுத்தது. இதன் வாயிலாக சென்னை அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது.