துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 23 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இடிபாடுகளில் இருந்து ஒரு நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்திருக்கிறது. ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏலக்ஸ் என்ற நாய் 23 நாட்கள் சிக்கி இருந்தது.

சரிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து சத்தம் வந்ததை அடுத்து துருக்கி விலங்கு நல அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அந்த நாய் மெலிந்து போய் இருந்தாலும் அதன் உடல் நிலை சீராக இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். உயிர் பிழைத்த அந்த நாயை பார்த்து மக்கள் இது ஒரு அதிசய நிகழ்வு என்று சொல்லி வருகிறார்கள்.