திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், ஐயாயிரம் ஆண்டு, பத்தாயிரம் ஆண்டு, 15 ஆயிரம் ஆண்டு, தொல்காப்பியம் தொடங்கி, சங்க கால இலக்கியத்திற்கு முன்னாக, இவர்கள் எமது தமிழர்கள். இங்கே அமர்ந்திருக்கிற எந்த  சகோதரனும், இங்கு இருக்கின்ற அரபு தேசத்திலிருந்து வரவில்லை. இந்த  மண்ணின் பூர்வீக குடிகள்.

அண்ணாமலைகளே, எச்சரிக்கை செய்கிறேன். எச். ராஜாக்களே, கைவர் – போலன் ஆரிய கூட்டமான, நாராயணன்களே, கே.டி. ராகவன்களே, எச்சரிக்கை செய்கிறேன். அளவு கடந்து பேசுகின்றீர்கள். வாய் துடுக்காக பேசுகிறீர்கள். வாய்  கொழுப்பெடுத்த பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.  கொழுப்புக்கு சொந்தக்காரன், நல்லி எலும்பு  சாப்பிட்டது  நாங்க டா.

எங்க கிட்ட வாய் கொழுப்பு எடுத்து பேசாதீங்க. உன்னையும்,  என்னையும் கூட்டு சோதிச்சா, யார்கிட்ட கொழுப்பு இருக்கும். உன்கிட்ட இருக்கிறதெல்லாம், கிரிமினல் கெட்ட கொழுப்பு. எங்க கிட்ட இருக்குறது எல்லாம், நல்ல கொழுப்பு. வாய் கொழுப்பு எடுத்து, எப்படினாலும் பேசுறது. மோடி ஆட்சியில் இருக்கிற வரைக்கும் ஆடுவீங்க. அப்புறம், உங்கள் ஆட்டம் அடங்கும் அல்லது அடக்குவோம் என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம்.

இங்க வந்து உட்கார்ந்துகிட்டு, இஸ்லாமிய தெரு வழியா தான் ஊர்வலம் போவோம். இன்னைக்கு ஆர்.எஸ்.எஸ், எதற்காக திப்பு சுல்தான் மாவீரன் பேரவை என்னை அழைத்து இருக்கிறது என்று சொன்னால், நான் இங்கே அலீம் புகாரி அவர்கள் குறிப்பிட்டது போல், ஓட்டுக்காகவோ, தேர்தல் அரசியல்காகவோ, நான் பேசுபவன் அல்ல. போராடுபவன் அல்ல என தெரிவித்தார்.