தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக படக்குழு நியூசிலாந்து சென்றது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, ஆர்.சி.15 படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் ஹைதராபாத்திலுள்ள சார்மினாரில் நடைபெறுகிறது. இதை டைரக்டர் ஷங்கர் தன் சமூகவலைதளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.