CUET PG நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக க்யூட் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 24ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 31 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.