பஞ்சாப் மாநிலம் பந்திட்டா பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் அங்கிருந்த பலரும் தப்பி சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து காயம் அடைந்த ஒரு சேவல் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராஜ்விந்தர் என்ற நபர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சேவலுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு தகுந்த ஆதாரமாக நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்த பலத்த பாதுகாப்புகளுடன் கவனிக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.