யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் யுபிஎஸ்சி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கு 347 பேரையும், இந்திய பொருளாதார சேவைக்கு 18 பேர் மற்றும் இந்திய புள்ளியல் சேவைக்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை என்ற இணையதளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.