சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ஐபிஎல் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இதனை காண ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ள CSK – PBKS இடையேயான போட்டியை காண மீண்டும் குமரி மற்றும் சென்னை வரை விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/சென்ற முகவரியில் பதிவு செய்யலாம். தேர்வு செய்யப்படும் 750 பேர் இந்த பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார். மேலும் தங்குமிடம், பயண செலவு மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்தும் அணி நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.